நூதனமான முறையில் டிப்பர் ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மற்றும் பாலை தீராந்திகள் பூநகரி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த கடத்தல் சம்பவத்தில் உடனிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி அரசபுரம் காட்டில் இருந்து முதிரைமரக் குற்றிகள் மற்றும் பாலை மரதீராந்திகள் டிப்பர் ரக வாகனத்தில் சூட்சுமமாக கடத்தப்பட்டவேளை இன்று அதிகாலை பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த டிப்பர் ரக வாகத்தில் முதிரை மரக்குற்றிகளையும், பாலை மரத் தீராந்திகளையும் மறைத்து வைத்து கற்களை மேலால் நிரப்பிய நிலையில் யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட போது பூநகரி 4ம் கட்டை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பூநகரி பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த பளை மற்றும் யாழ்ப்பாண பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் பூநகரி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பண்டார அவர்களின் கண்காணிப்பின் கீழ் பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி புஸ்பகுமார தலைமையில் பூநகரி பொலிசாரினால் கடந்த 3 மாத காலப்பகுதியில் மிகவும் சூடசுமமான முறையில் இடம்பெற்ற சட்ட விரோதமான பல மர கடத்தல்கள் முறியடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வாழக்கு தாக்கல் செய்யபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி